“என்னிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பதே வேறு.....!” - சன்னி லியோன்


Image Courtesy : Twitter
x
Image Courtesy : Twitter
தினத்தந்தி 12 March 2022 1:04 PM IST (Updated: 12 March 2022 1:04 PM IST)
t-max-icont-min-icon

சன்னி லியோன் திரையுலகில் தனது பயணம் பற்றியும், 'நல்லது, கெட்டது மற்றும் மோசமான' தருணங்கள் பற்றியும் பேசியுள்ளார்.

மும்பை,

வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து நடிகையான சன்னி லியோன் தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். தற்போது தமிழ், இந்தி, கன்னட மொழிகளில் தயாராகும் வீரமாதேவி என்ற சரித்திர படத்தில் நடித்து வருகிறார். மேலும் பேய்ப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

தனியார் பத்திரிக்கைக்கு அவர் கொடுத்த நேர்காணலில், 40 வயதான சன்னி லியோன் தனது திரையுலக பயணம், நல்லது, கெட்டது மற்றும் தனது மோசமான தருணங்கள் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

இந்நிலையில், சன்னி லியோன் தனது வாழ்க்கை வரலாற்றுப் படமான “கரன்ஜித் கவுர்” – தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் சன்னி லியோனுக்குப் பிறகு, அனாமிகா என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.

இதுகுறித்து அவர் தனியார் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

“அனாமிகா செட்டில் நான் செலவழித்த ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நாளும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, ஏனென்றால் சண்டை காட்சிகள் எனக்கு உண்மையிலேயே பிடிக்கும். எனது நிஜ வாழ்க்கையில் நான் ஒருபோதும் சண்டையிட மாட்டேன், எனவே இந்த வித்தியாசமான விஷயங்களை எப்படி செய்வது என்று கற்றுக்கொள்வது மிகவும் சந்தோசமாக இருந்தது.

அனாமிகா என்று படத்திற்கு பெயர் வைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. விக்ரம் சாரிடம் நிறைய கற்றுக்கொண்டேன். நடிப்பாக இருந்தாலும் சரி, சண்டை காட்சியாக இருந்தாலும் சரி, என்னையும் என் கதாபாத்திரத்தையும் அவர் எப்படி உருவாக்கினார் என்பது இதுவரை நான் அனுபவித்திராத ஒன்று. யாரோ ஒருவர் தங்கள் முழு முயற்சியையும் என் மீது நம்பிக்கையையும் வைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 

நான் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடிப்பேன் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள் அவ்வாறு நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இது ஒரு நல்ல சமநிலையான கதாபாத்திரம், காதல் இருக்கிறது, நெருக்கமான காட்சிகள் உள்ளன, ஆனால் இது மக்கள் என்னிடம் வழக்கமாக எதிர்பார்க்கும் கதாபாத்திரம் அல்ல.

நான் என் ரசிகர்களை நேசிக்கிறேன், அவர்கள் என்னை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் என்னை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், காலப்போக்கில் அவர்கள் என்னை ஏற்றுக்கொள்கிறார்கள். ஒவ்வொரு படமும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், நான் செய்வதை மக்கள் விரும்புவார்கள், சில சமயங்களில் அவர்கள் விரும்ப மாட்டார்கள், ஆனால் ஒரு நடிகராக, நான் தொடர்ந்து வித்தியாசமான விஷயங்களைச் செய்து, என்னிடம் இருப்பதை நிரூபிக்க விரும்புகிறேன்” என்றார்.

1 More update

Next Story