மத்திய பட்ஜெட்: நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வருகை


மத்திய பட்ஜெட்: நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வருகை
x
தினத்தந்தி 1 Feb 2022 4:45 AM GMT (Updated: 1 Feb 2022 5:37 AM GMT)

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

புதுடெல்லி,

2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் காகிதமில்லா மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இது, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 4-வது பட்ஜெட் ஆகும்.

உத்தரபிரதேசம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்காளர்களை கவர கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

குறிப்பாக, வருமான வரி உச்சரவம்பு ரூ. 2.5 லட்சத்தில் இருந்து ரூ. 3 லட்சமாக அதிகரிக்கப்படுமா?, வரி சலுகைகள் அறிவிக்கப்படுமா? என பல்வேறு எதிர்பார்ப்புகள் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் எழுந்துள்ளன. மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தற்போது நாடாளுமன்றம் வந்துள்ளார். நிதி அமைச்சக அதிகாரிகளுடன் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வந்துள்ளார்.

முன்னதாக, நிதி மந்திரி பட்ஜெட் விவரங்கள் அடங்கிய டெப்லெட் (Tablet) உடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story