பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை முறையாக செய்து கொடுக்கவேண்டும்


பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை முறையாக செய்து கொடுக்கவேண்டும்
x

பொது மக்களுக்கு அடிப்படை வசதிகளை முறையாக செய்து கொடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.

அரசூர்,

திருவெண்ணெய்நல்லூர் மற்றும் திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு கிராம வளர்ச்சி குறித்து சிறப்பு பயிற்சி முகாம் திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. முகாமிற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன் தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் (தணிக்கை) துரைசாமி, திருவெண்ணெய்நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலரும் பயிற்சி மைய பொறுப்பாளருமான ராமகிருஷ்ணன், திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனுவாசன், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திட்டப்பணிகள்

முகாமை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், கிராம ஊராட்சிகளில் வரும் 5 ஆண்டிற்கு தேவையான திட்டப்பணிகளை அதிகாரிகள் கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து தயாரிக்க வேண்டும். மேலும் மக்களுக்கு தேவையான குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனுக்குடன் முறையாக செய்து கொடுக்க வேண்டும் என்றார்.இந்த முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக கிராம வளர்ச்சி குறித்த பயிற்சி புத்தகத்தை கலெக்டர் சுப்பிரமணியன் அலுவலர்களுக்கு வழங்கினார்.


Next Story