கார் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மேலும் ஒரு வாலிபர் சாவு


கார் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மேலும் ஒரு வாலிபர் சாவு
x
தினத்தந்தி 9 Sep 2017 10:15 PM GMT (Updated: 9 Sep 2017 7:39 PM GMT)

தக்கலை அருகே கார் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மேலும் ஒரு வாலிபர் இறந்தார். இதையடுத்து பலியானவர்கள் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது.

தக்கலை,

அழகியமண்டபம் அருகே உள்ள நெய்யூர் மேல்கரை தெருவை சேர்ந்தவர் தினேஷ் (வயது 26), கட்டிட தொழிலாளி. இவரது நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த ரவி, புதுகுளத்தை சேர்ந்த பால்ராஜ் (35). இவர்கள் 3 பேரும் கடந்த 5–ந் தேதி குமாரகோவிலில் சாமி கும்பிடுவதற்காக ஒரு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை பால்ராஜ் ஓட்டி சென்றார்.  

இவர்கள் தக்கலை அருகே புலியூர்குறிச்சி பகுதியில் சென்ற போது, முதியவர் ஒருவர் திடீரென சாலையை கடப்பதற்காக குறுக்கே வந்தார். அப்போது, மோட்டார் சைக்கிள் முதியவர் மீது மோதியது. அத்துடன், அது நிலைதடுமாறி எதிரே வந்த கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தினேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

சிகிச்சை பலனின்றி சாவு

படுகாயம் அடைந்த பால்ராஜ், ரவி ஆகியோரை அக்கம்பக்கத்தில் நின்றவர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பால்ராஜ் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார்.

 இதுகுறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story