பேரறிவாளனுக்கு மேலும் 1 மாதம் பரோல் வழங்கிய அரசுக்கு நன்றி தாயார் அற்புதம்மாள் பேட்டி

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக தாயார் அற்புதம்மாள் தெரிவித்தார்.
ஜோலார்பேட்டை,
இது குறித்து தாயார் அற்புதம்மாள் நிருபர்களிடம் கூறியதாவது:–
எனது (அற்புதம்மாள்) கணவர் குயில்தாசனுக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என கூறியிருந்தனர். அறுவை சிகிச்சையின்போது மகன் பேரறிவாளன் உடனிருந்தால் அவருக்கு ஆறுதலாக இருக்கும் என்பதால், மகனின் பரோலை மேலும் 1 மாதம் நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியிருந்தேன்.
இதனை ஏற்று தமிழக முதல்–அமைச்சர், சட்டத்துறை அமைச்சர் ஆகியோர் நடவடிக்கை மேற்கொண்டு மேலும் 1 மாதம் பரோல் வழங்கியதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.மேலும் பேரறிவாளன் பரோலுக்கும், விடுதலைக்கும் குரல் கொடுத்த அரசியல் கட்சி பிரமுகர்கள், தன்னார்வ அமைப்பினர்கள், சமூக ஆர்வலர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story