தஞ்சையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தஞ்சையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Oct 2017 10:45 PM GMT (Updated: 11 Oct 2017 10:00 PM GMT)

தஞ்சையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்,

பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா நடத்தி வரும் நிறுவனத்தின் வருவாய் அதிகரித்துள்ளது. ஜெய்ஷா மீதான ஊழல் புகார் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க மத்தியஅரசை வலியுறுத்தி தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநகர மாவட்ட துணைத் தலைவர் எஸ்.ஆர்.வாசு தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் நாஞ்சி.கி.வரதராஜன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் பழனியப்பன் வரவேற்றார்.

இதில் நிர்வாகிகள் துணைத் தலைவர் சதாசிவம், மகளிரணி பொதுச் செயலாளர் ரேவதி ஷகிலோ, கோட்ட தலைவர் கதர் வெங்கடேசன், நிர்வாகிகள் லட்சுமி நாராயணன், ராஜகோபால், வேங்கை கணேசன், முருகேசன், சந்திரசேகரன், ஜான்சன், சாந்தா ராமதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story