டெங்கு காய்ச்சலுக்கு பெண் பலி மகனுக்கும் பாதிப்பு


டெங்கு காய்ச்சலுக்கு பெண் பலி மகனுக்கும் பாதிப்பு
x
தினத்தந்தி 15 Oct 2017 10:30 PM GMT (Updated: 15 Oct 2017 9:51 PM GMT)

வத்தலக்குண்டு அருகே டெங்கு காய்ச்சலுக்கு பெண் பலி மகனுக்கும் பாதிப்பு

வத்தலக்குண்டு,

வத்தலக்குண்டு அருகே உள்ள விருவீடு நடகோட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாயி. இவருடைய மனைவி அம்பிகா (வயது 30). இவர்களுக்கு உஷாரவீனா (13), கரணி (9) என்ற மகள்களும், கவுதம் (10) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்பிகாவுக்கும், கவுதமுக்கும் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக விருவீடு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் சேர்க்கப் பட்ட னர். ஆனால் காய்ச்சல் குணமாக வில்லை. இதையடுத்து மதுரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களை டாக்டர் கள் பரிசோதனை செய்த போது டெங்கு பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரும் தனிப்பிரிவுக்கு மாற்றப் பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று மதியம் அம்பிகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவருடைய உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. காய்ச்சலால் பாதிக் கப்பட்ட கவுதம் தாய்க்கு இறுதிச்சடங்கு செய்தான். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. 

Related Tags :
Next Story