ஜெயலலிதாவை அவதூறு பேசியதாக வழக்கு: விஜயகாந்த் மீதான விசாரணை டிசம்பர் 13-ந்தேதிக்கு ஒத்திவைப்பு


ஜெயலலிதாவை அவதூறு பேசியதாக வழக்கு: விஜயகாந்த் மீதான விசாரணை டிசம்பர் 13-ந்தேதிக்கு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 2 Nov 2017 10:45 PM GMT (Updated: 2 Nov 2017 8:21 PM GMT)

ஜெயலலிதாவை பற்றி அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் விஜயகாந்த் மீதான விசாரணை டிசம்பர் மாதம் 13-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சையில் கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி தே.மு.தி.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், தமிழக அரசையும், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவையும் அவதூறாக பேசியதாக தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதே போல் தஞ்சை மாவட்டம் கபிஸ்தலத்தில் 2013-ம் ஆண்டு நடந்த பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தே.மு.தி.க. தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, தே.மு.தி.க. பேச்சாளர் ஜெயகுமார் ஆகியோர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. இந்த 2 வழக்குகளும் நேற்று நீதிபதி நக்கீரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கில் ஆஜராவதில் இருந்து விஜயகாந்த் விலக்கு பெற்றுள்ளதாகவும், பார்த்தசாரதிக்கு உடல்நிலை சரியில்லை என அவருடைய வக்கீல்கள் மாதவன், செந்தில்குமார் ஆகியோர் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஜெயகுமாருக்கு பிடிவாரண்டு உள்ளது. இதையடுத்து வழக்கை நீதிபதி நக்கீரன் விசாரித்து விசாரணையை டிசம்பர் மாதம் 13-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். 

Next Story