மொரப்பூரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் மனைவி தற்கொலை


மொரப்பூரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் மனைவி தற்கொலை
x
தினத்தந்தி 5 March 2018 10:15 PM GMT (Updated: 5 March 2018 10:14 PM GMT)

மொரப்பூரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.

மொரப்பூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடை வள்ளுவர் நகரை சேர்ந்தவர் ஜெயகீர்த்தி. இவர் தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி முத்தமிழ் (வயது27). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகீர்த்தி மொரப்பூரில் உள்ள போலீஸ் குடியிருப்பில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இந்தநிலையில் முத்தமிழுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதற்காக அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் முத்தமிழ் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். நேற்று காலை முத்தமிழ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மொரப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட முத்தமிழின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

Next Story