திருவள்ளூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


திருவள்ளூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 12 May 2018 9:31 PM GMT (Updated: 12 May 2018 9:31 PM GMT)

திருவள்ளூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டை வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் தேசப்பன் (வயது 40). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

இவரது மனைவி உஷா (35). இவர் திருவள்ளூரை அடுத்த புட்லூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் கணவன், மனைவி இருவரும் வழக்கம் போல வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றனர்.

இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

நகை, பணம் கொள்ளை

அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் தங்க நகையும், ரொக்கப்பணம் ரூ.10 ஆயிரமும் திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து தேசப்பன் செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story