கைது செய்யப்பட்ட பயங்கரவாதி முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது அம்பலம்


கைது செய்யப்பட்ட பயங்கரவாதி முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது அம்பலம்
x
தினத்தந்தி 14 May 2018 11:03 PM GMT (Updated: 14 May 2018 11:03 PM GMT)

கைது செய்யப்பட்ட பயங்கரவாதி மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை,

மராட்டிய பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் சில தினங்களுக்கு முன்பு மும்பையில் பதுங்கியிருந்த பயங்கரவாதி பைசல் ஹசன் மிஸ்ராவை(வயது32) கைது செய்தனர். இவர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் நடைபெற்ற பயிற்சி முகாமில் கலந்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மும்பை நிழல் உலக தாதா சோட்டா சகிலின் கூட்டாளியான பரூக் தேவதிவாலாவுடன் இவருக்கு தொடர்பு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இந்தநிலையில் பைசல் ஹசன் மிஸ்ராவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் மும்பை, குஜராத் மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மக்கள் நடமாட்டம் அதிகமான பொது இடங்களில் இந்த தாக்குதல்களை நடத்த திட்டமிட்டு இருந்ததும், தனக்கான உத்தரவு வருவதற்காக காத்திருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story