காரில் கடத்தி சென்று மனைவியை, நண்பருக்கு விருந்தாக்கியவர் கைது


காரில் கடத்தி சென்று மனைவியை, நண்பருக்கு விருந்தாக்கியவர் கைது
x
தினத்தந்தி 21 May 2018 5:31 AM IST (Updated: 21 May 2018 5:31 AM IST)
t-max-icont-min-icon

மனைவியை காரில் கடத்திச்சென்று நண்பருக்கு விருந்தாக்கிய சம்பவத்தில் கணவரையும், அவரது நண்பரையும் போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

பால்கர் மாவட்டம் விரார் பகுதியை சேர்ந்தவர் அஜித்ஜனா (வயது34). இவருக்கு பாந்திராவை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு அஜித்ஜனா மதுகுடித்துவிட்டு வந்து மனைவியை கொடுமைப்படுத்தி வந்து இருக்கிறார். இதையடுத்து அவரது மனைவி அவரை பிரிந்து பாந்திராவில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

மேலும் அஜித் ஜனாவிடம் விவாகரத்து கேட்டார். ஆனால் அஜித் ஜனா அதற்குரிய ஆவணங்களில் கையெழுத்து போடாமல் காலம் தாழ்த்தி வந்தார்.

கடந்த மாதம் அவர் விவாகரத்து ஆவணங்களில் கையெழுத்து போடுவதாக கூறி, பிரிந்து வாழும் மனைவியை மும்பை பாந்திரா பாலிஹில் பகுதிக்கு வரச்சொன்னார். அவரின் பேச்சை நம் அங்குவந்த மனைவியை அஜித்ஜனா, நண்பர் ஒருவருடன் சேர்ந்து விரார் பகுதிக்கு காரில் கடத்தி சென்றார். அங்கு ஒரு வீட்டில் மனைவியை அடைத்து வைத்து கற்பழித்தார். பின்னர் தனது நண்பருக்கும் மனைவியை விருந்தாக்கினார். அவர்களிடம் இருந்து தப்பி வந்த அந்த பெண் பாந்திரா போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் கடத்தல், கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து அஜித் ஜனாவை கைது செய்தனர். மேலும் தலைமறைவான அவரது நண்பரை தேடிவந்தனர்.

இந்தநிலையில், அவரது நண்பரும் போலீசில் சிக்கினார். போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story