சங்கரன்கோவில் அருகே மின்வாரிய ஊழியர் தற்கொலை பணிச்சுமை காரணமா? போலீசார் விசாரணை


சங்கரன்கோவில் அருகே மின்வாரிய ஊழியர் தற்கொலை பணிச்சுமை காரணமா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 10 Jun 2018 9:00 PM GMT (Updated: 10 Jun 2018 7:20 PM GMT)

சங்கரன்கோவில் அருகே மின்வாரிய ஊழியர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சங்கரன்கோவில், 

சங்கரன்கோவில் அருகே மின்வாரிய ஊழியர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பணிச்சுமை காரணமாக அவர் தற்கொலை செய்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மின்வாரிய ஊழியர் தற்கொலை

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சீவலராயனேந்தல் பகுதியை சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது 46). இவர் தென்காசி அருகே உள்ள ஆய்க்குடி மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குழந்தைவேல் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

பணிச்சுமை காரணமா?

இதுகுறித்து தகவல் அறிந்த சங்கரன்கோவில் போலீசார் குழந்தைவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தைவேல் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story