நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் ஊர்கள் அறிவிப்பு


நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் ஊர்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 13 Jun 2018 8:30 PM GMT (Updated: 13 Jun 2018 1:20 PM GMT)

நாளை மறுநாள் (சனிக்கிழமை) மின்தடை ஏற்படும் ஊர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

கோவில்பட்டி, 

நாளை மறுநாள் (சனிக்கிழமை) மின்தடை ஏற்படும் ஊர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின்வினியோக செயற்பொறியாளர் சகர்பான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

கழுகுமலை, எட்டயபுரம்

கழுகுமலை, கோவில்பட்டி, எப்போதும்வென்றான், விஜயாபுரி, சிட்கோ, எம்.துரைச்சாமிபுரம், சிவஞானபுரம், செட்டிக்குறிச்சி, சன்னதுபுதுக்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.

எனவே அங்கிருந்து மின் வினியோகம் பெறும் கழுகுமலை, குமாரபுரம், வேலாயுதபுரம், கரடிகுளம், சி.ஆர்.காலனி, வெள்ளப்பனேரி, குருவிகுளம், எப்போதும்வென்றான், எட்டயபுரம், கீழமங்கலம், பசுவந்தனை, நாகலாபுரம், கடம்பூர், ஒட்டநத்தம், குளத்தூர், சூரங்குடி, வானரமுட்டி, காலாங்கரைப்பட்டி, குமரெட்டியாபுரம், காளாம்பட்டி, சங்கரலிங்கபுரம், நாலாட்டின்புத்தூர், இடைசெவல், சத்திரப்பட்டி, வில்லிசேரி, மெய்தலைவன்பட்டி, செட்டிகுறிச்சி, சிதம்பரம்பட்டி, கட்டாலங்குளம், வெள்ளாளங்கோட்டை, ஓலைகுளம், திருமங்கலகுறிச்சி, பெரியசாமிபுரம், மூர்த்தீசுவரபுரம்,

கயத்தாறு நகர பஞ்சாயத்து பகுதிகள், ராஜாபுதுக்குடி, டி.என்.குளம், ஆத்திகுளம், தெற்கு இலந்தைகுளம், வடக்கு இலந்தைகுளம், சாலைப்புதூர், மு.கைலாசபுரம், கீழக்கோட்டை, கொடியன்குளம், என்.புதூர், நாரைக்கிணறு, புளியம்பட்டி, சவலாப்பேரி, ஆலந்தா ஒரு பகுதி, பிராஞ்சேரி, இத்திகுளம், வடக்கு செழியநல்லூர், காங்கீசுவரன்புதூர், குப்பனாபுரம், பருத்திகுளம், சன்னதுபுதுக்குடி, வடகரை, காற்றாலை மின்தொடர்1, 2 ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

கோவில்பட்டி

கோவில்பட்டி, புதுகிராமம், இலுப்பையூரணி, சங்கரலிங்காபுரம், லாயல் மில் பகுதி, முகமதுசாலியாபுரம், இளையரசனேந்தல், அய்யனேரி, அப்பனேரி, திட்டங்குளம், பாண்டவர்மங்கலம், ஈராச்சி, கசவன்குன்று, துறையூர், காமநாயக்கன்பட்டி, முத்துநகர், சிட்கோ, ஜோதிநகர், புதுரோடு, சிவஞானபுரம், வாகைத்தாவூர், சவலப்பேரி, தளவாய்புரம், நாகம்பட்டி ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story