திருவாரூரில் இருந்து சேலத்திற்கு பொது வினியோக திட்டத்திற்காக 1,250 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது


திருவாரூரில் இருந்து சேலத்திற்கு பொது வினியோக திட்டத்திற்காக 1,250 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது
x
தினத்தந்தி 27 Jun 2018 10:15 PM GMT (Updated: 27 Jun 2018 9:35 PM GMT)

திருவாரூரில் இருந்து சேலத்திற்கு பொது வினியோக திட்டத்திற்காக 1,250 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி நிறைவு பெற்றது. நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல், அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அரவை செய்யப்பட்ட அரிசி மூட்டைகள் நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு பொதுவினியோக திட்டத்திற்காக பல மாவட்டங்களுக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வரு கிறது. அதன்படி நேற்று திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சேமிப்பு கிடங்கில் இருந்து அரிசி மூட்டைகள் 94 லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. அங்கு லாரிகளில் இருந்து அரிசி மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளர்கள், சரக்கு ரெயில் பெட்டிகளில் ஏற்றினர். அதனை தொடர்ந்து பொது வினியோக திட்டத்திற்காக 24 பெட்டிகளில் ஏற்றப்பட்ட 1,250 டன் சன்னரக அரிசி மூட்டைகளுடன், திருவாரூரில் இருந்து சேலத்திற்கு சரக்கு ரெயில் புறப்பட்டு சென்றது. 

Next Story