போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 July 2018 10:30 PM GMT (Updated: 12 July 2018 10:11 PM GMT)

கண்டக்டர்கள் இல்லாமல் பஸ்கள் இயக்குவதை கண்டித்து போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி நகர கிளை அரசு போக்குவரத்து கழக பணிமனை எதிரில், தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் போக்குவரத்து துறையில் கண்டக்டர்கள் இல்லாமல் பஸ்கள் இயக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய சங்க துணை பொதுச் செயலாளர் முரளி தலைமை தாங்கினார்.

மத்திய சங்கத்தின் துணை செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். இதில் கிளை தலைவர் சிவக்குமர், செயலாளர் வரதராஜன், பொருளாளர் பார்த்தீபன், நிர்வாகிகள் ரங்கன், முருகேசன், சென்றாயன், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், கண்டக்டர்கள் இல்லாமல் பஸ்கள் இயக்குவதை கண்டித்தும், போக்குவரத்து துறைக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். 

Next Story