மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் சாலை விபத்தில் பலி


மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் சாலை விபத்தில் பலி
x
தினத்தந்தி 20 Aug 2018 10:15 PM GMT (Updated: 20 Aug 2018 7:42 PM GMT)

மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள லெம்பலக்குடியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் அழகுநாதன் என்ற சூர்யா(வயது 25). இவர் நேற்று முன்தினம் இரவு லெணா விலக்கு பகுதியில் இருந்து 60 வயது மதிக்கத்தக்க முதியவருடன் மோட்டார் சைக்கிளில் காரைக் குடி-திருச்சி நெடுஞ்சாலையில் திருமயம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

புலிவலம் விலக்கு பகுதியில் சென்றபோது, அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த சூர்யா மற்றும் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த நமணசமுத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 2 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது?, அதை ஓட்டி சென்றவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story