சொத்து தகராறில் விவசாயியை தாக்கிய தம்பி கைது


சொத்து தகராறில் விவசாயியை தாக்கிய தம்பி கைது
x
தினத்தந்தி 5 Sep 2018 9:30 PM GMT (Updated: 5 Sep 2018 4:43 PM GMT)

திருக்கோவிலூர் அருகே சொத்து தகராறில் விவசாயியை தாக்கிய தம்பி போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருக்கோவிலூர் ,

திருக்கோவிலூரை அடுத்துள்ள திருமலைப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 60) விவசாயி. இவருக்கும் இவரது தம்பி காசி (வயது 52) என்பவருக்கும் சொத்து தகராறு இருந்து வருகின்றது. சம்பவத்தன்றும் இது தொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு நடந்துள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த காசி அர்ஜூனன், அவரது மனைவி வீரம்மாள் மற்றும் மகளை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. 

இதில் படுகாயம் அடைந்த அவர்கள் 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

இது குறித்து அர்ஜூனன் கொடுத்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் செந்தில்வாசன் வழக்கு பதிவு செய்து காசியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story