இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி


இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 13 Sep 2018 9:30 PM GMT (Updated: 13 Sep 2018 4:56 PM GMT)

பண்ருட்டி அருகே இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பண்ருட்டி, 

பண்ருட்டி அருகே உள்ள மேல்காங்கேயன்குப்பம் வடக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 29), கூலி தொழிலாளி. இவருக்கு தமிழரசி(23) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கணவன்–மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதனால் மனமுடைந்த தமிழரசி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த வி‌ஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்து புகாரின்பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவருடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story