மனநலம் பாதிக்கப்பட்ட பெண் படுகொலை - போலீசார் விசாரணை


மனநலம் பாதிக்கப்பட்ட பெண் படுகொலை - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 29 Sep 2018 11:00 PM GMT (Updated: 29 Sep 2018 10:33 PM GMT)

சீர்காழி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சீர்காழி,

நாகை மாவட்டம், சீர்காழி அருகே கன்னியாகுடி கிராமம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் கலா (வயது 45). மனநலம் பாதிக்கப்பட்டவர். இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதால் கன்னியாகுடி பகுதியில் சுற்றித்திரிந்து வந்தார். இந்தநிலையில் நேற்று கன்னியாகுடி கிராமத்தில் உள்ள நூலக கட்டிடத்தின் பின்புறம் கலா காயங்களோடு பிணமாக கிடந்தார்.

இதனை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் வைத்தீஸ்வரன்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வைத்தீஸ்வரன்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு, கலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வைத்தீஸ்வரன்கோவில் போலீசார், மனநலம் பாதிக்கப்பட்ட கலா கற்பழித்து படுகொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Next Story