ராணிப்பேட்டை அருகே கார்-லாரி மோதல்; என்ஜினீயர் பலி


ராணிப்பேட்டை அருகே கார்-லாரி மோதல்; என்ஜினீயர் பலி
x
தினத்தந்தி 3 Oct 2018 11:15 PM GMT (Updated: 3 Oct 2018 9:29 PM GMT)

ராணிப்பேட்டை அருகே கார்-லாரி மோதிய விபத்தில் என்ஜினீயர் பலியானார்.

சிப்காட்( ராணிப்பேட்டை),

ராணிப்பேட்டை பெல் பழைய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவர், பெல் தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சாந்தி. இவர் தி.மு.க. முன்னாள் வாலாஜா ஒன்றியக்குழு உறுப்பினர். இவரது மகன் சுரேஷ்நாத் (25). என்ஜினீயர்.

நேற்று காலை சுரேஷ்நாத் காரில் பெல் பகுதியில் இருந்து திருவலம் நோக்கி பெல் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருவலத்தில் இருந்து பெல் நோக்கி சிவா (27) என்பவர் ஓட்டி வந்த லாரியும், சுரேஷ்நாத் ஓட்டி சென்ற காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதில் சுரேஷ்நாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

Next Story