மேகமலை வனப்பகுதியில் புலி, சிறுத்தை நடமாட்டம் கண்காணிப்பு கேமராவில் பதிவாயின


மேகமலை வனப்பகுதியில் புலி, சிறுத்தை நடமாட்டம் கண்காணிப்பு கேமராவில் பதிவாயின
x
தினத்தந்தி 5 Oct 2018 10:30 PM GMT (Updated: 5 Oct 2018 8:41 PM GMT)

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகேயுள்ள மேகமலை வனப்பகுதியில் புலி, சிறுத்தை நடமாட்டம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன.

சின்னமனூர்,

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகேயுள்ள மேகமலை வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட விலங்குகள் அதிகம் வசித்து வருகின்றன. அந்த பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிப்பதற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வனத்துறை சார்பில் கேமராக்கள் பொருத்தப்பட்டது. இந்த நிலையில் வனத்துறையினர் நேற்று அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை உலா வரும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் யாரும் சென்று விடாமல் இருக்கும் வகையில் வனத்துறையினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story