பாந்திரா டெர்மினசில் ரூ.1¼ லட்சம் போதைப்பொருளுடன் வாலிபர் கைது


பாந்திரா டெர்மினசில் ரூ.1¼ லட்சம் போதைப்பொருளுடன் வாலிபர் கைது
x
தினத்தந்தி 31 Oct 2018 12:13 AM GMT (Updated: 31 Oct 2018 12:13 AM GMT)

மும்பை பாந்திரா டெர்மினஸ் ரெயில் நிலையத்தில் வாலிபர் ஒருவர் போதைப் பொருளுடன் நின்று கொண்டு இருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

மும்பை,

போலீசார்  அதன்பேரில் அங்கு சாதாரண உடையில் சென்று கண்காணித்தனர்.

அப்போது, அங்கு கையில் பையுடன் நின்று கொண்டிருந்த குறிப்பிட்ட வாலிபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரது பையில் சோதனையிட்டனர். அப்போது ‘மெபட்ரோன்’ என்ற போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் 60 கிராம் எடை கொண்ட அந்த போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் ஆகும். இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர்.

விசாரணையில், அவரது பெயர் சிக்கந்தர் சேக் (வயது 34) என்பது தெரியவந்தது. போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story