பராமரிப்பு பணி: மின்சார ரெயில் சேவையில் மாற்றம்


பராமரிப்பு பணி: மின்சார ரெயில் சேவையில் மாற்றம்
x
தினத்தந்தி 9 Nov 2018 9:15 PM GMT (Updated: 9 Nov 2018 8:04 PM GMT)

பராமரிப்பு பணியால் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை, 

தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை-கூடூர் இடையே பராமரிப்பு பணி காரணமாக இன்று(சனிக்கிழமை) மற்றும் நாளை(ஞாயிற்றுக்கிழமை) மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி காலை 8.15, 9.30, 10.25 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் மீஞ்சூர்-கும்மிடிப்பூண்டி இடையேயும், கும்மிடிப்பூண்டி-மூர்மார்க்கெட் காலை 10.20, 11.20, 11.50 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி-மீஞ்சூர் இடையேயும், மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி காலை 9 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் எண்ணூர்-கும்மிடிப்பூண்டி இடையேயும், சூலூர்ப்பேட்டை-மூர்மார்க்கெட் காலை 11.15 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி-எண்ணூர் இடையேயும் இன்று மற்றும் நாளை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* சென்னை கடற்கரை- பொன்னேரி காலை 5.30 மணிக்கும், பொன்னேரி- கடற்கரை காலை 7 மணிக்கும் புறப்படும் மின்சார ரெயில் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story