இடத்தகராறில் விவசாயியை தாக்கிய அண்ணன்– தம்பிக்கு ஜெயில்; சிவகங்கை கோர்ட்டு தீர்ப்பு


இடத்தகராறில் விவசாயியை தாக்கிய அண்ணன்– தம்பிக்கு ஜெயில்; சிவகங்கை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 14 Nov 2018 11:02 PM GMT (Updated: 14 Nov 2018 11:02 PM GMT)

மானாமதுரை அருகே இடத்தகராறில் விவசாயியை தாக்கிய அண்ணன்– தம்பிக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சிவகங்கை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

சிவகங்கை,

மானாமதுரையை அடுத்த மேலபசலை கிராமத்தை சேர்ந்தவர் நன்னி(வயது 80) விவசாயி. இவருக்கும், இதே கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்கும் இடையே இடத்தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 1.11.2004–ல் ரவிச்சந்திரன் மற்றும் அவரது தம்பி பூமிநாதன் ஆகியோர் சேர்ந்து விவசாயி நன்னியை தாக்கி அவரது ஜாதியை சொல்லி திட்டினார்களாம். இதைத்தொடர்ந்து ரவிச்சந்தின் மற்றும் பூமிநாதன் ஆகிய 2 பேரையும் மானாமதுரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது சிவகங்கையில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுரேஷ்குமார் ஆஜரானார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி தனியரசு, குற்றம் சாட்டப்பட்ட ரவிச்சந்திரனுக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் ரூ.4 ஆயிரம் அபராதமும், அவரது தம்பி பூமிநாதனுக்கு ஒரு ஆண்டு ஜெயில், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.


Next Story