மாநாட்டிற்கு ரூ.50 ஆயிரம் நிதி தருமாறு டெக்ஸ்டைல் அதிபருக்கு மிரட்டல் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கைது


மாநாட்டிற்கு ரூ.50 ஆயிரம் நிதி தருமாறு டெக்ஸ்டைல் அதிபருக்கு மிரட்டல் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கைது
x
தினத்தந்தி 20 Nov 2018 11:00 PM GMT (Updated: 20 Nov 2018 8:18 PM GMT)

மாநாட்டிற்கு ரூ.50 ஆயிரம் நிதி தருமாறு கரூர் டெக்ஸ்டைல் அதிபரை மிரட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

கரூர்,

கரூர் காந்திகிராமம் திண்ணப்பா நகரை சேர்ந்தவர் சுரேஷ்பாலாஜி (வயது 33). தொழிலதிபரான இவர், சணபிரட்டி அருகே உள்ள தொழிற்பேட்டையில் டெக்ஸ்டைல் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 17-ந்தேதி தெற்கு காந்திகிராமத்தை சேர்ந்தவரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாநில துணை செயலாளருமான பாஸ்கர் என்கிற பகலவன் பாஸ்கர் (45) உள்பட சிலர் சேர்ந்து , திருச்சியில் நடைபெற உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டிற்காக கட்சி நிதியாக ரூ.50 ஆயிரம் தருமாறு சுரேஷ்பாலாஜியிடம் கேட்டனர். அதற்கு அவர் பணம் தர மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள், பெட்ரோல் கேனை எடுத்து வந்து சுரேஷ் பாலாஜிக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

மேலும் பணம் தரவில்லையெனில் டெக்ஸ்டைல் நிறுவனத்தை எரித்து விடுவதாகவும் கூறி தகராறில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் சுரேஷ் பாலாஜி புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பகலவன் பாஸ்கரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story