திருவள்ளூர் அருகே சேற்றில் அமுக்கி தனியார் நிறுவன ஊழியர் கொலை


திருவள்ளூர் அருகே சேற்றில் அமுக்கி தனியார் நிறுவன ஊழியர் கொலை
x
தினத்தந்தி 2 Dec 2018 10:30 PM GMT (Updated: 2 Dec 2018 6:41 PM GMT)

திருவள்ளூர் அருகே சேற்றில் அமுக்கி தனியார் நிறுவன ஊழியர் கொலை செய்யப்பட்டார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த மேல்நல்லாத்தூர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 37). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு காயத்ரி என்ற மகளும், பிரவீன் என்ற மகனும் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் மோட்டார்சைக்கிளில் சென்ற ராமச்சந்திரன் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள முக்குளத்தீஸ்வரர் கோவில் குளத்தில் உள்ள சேற்றில் முகம் அமுக்கப்பட்ட நிலையில் ராமச்சந்திரன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். திருவள்ளூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராக்கி குமாரி மற்றும் போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். ராமச்சந்திரனின் மோட்டார் சைக்கிள் அருகில் உள்ள முள்தரில் கிடந்தது.

மேலும் அவரது செருப்பு குளத்தின் கரையோரம் கிடந்தது. கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story