கிணற்றின் குறுக்கே இருந்த கம்பத்தில் பிணமாக தொங்கிய தொழிலாளி போலீசார் விசாரணை


கிணற்றின் குறுக்கே இருந்த கம்பத்தில் பிணமாக தொங்கிய தொழிலாளி போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 9 Dec 2018 11:00 PM GMT (Updated: 9 Dec 2018 9:09 PM GMT)

ஒரத்தநாடு அருகே கிணற்றின் குறுக்கே இருந்த கம்பத்தில் தொழிலாளி ஒருவர் பிணமாக தொங்கினார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள திருமங்கலக்கோட்டை கிழக்கு முக்கரை கிராமத்தை சேர்ந்தவர் ராமையன். இவருடைய மகன் பாண்டியன் (வயது39). தொழிலாளி.

திருமணமாகாதவர். இவர் தனது தந்தை ராமையனுடன் கூரை வீட்டில் வசித்து வந்தார். கடந்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதி இரவு தாக்கிய கஜா புயலில் இவருடைய கூரை வீடு சேதமடைந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பாண்டியனை காணவில்லை. அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடி வந்தனர். நேற்று அதே பகுதியில் ஒரு விவசாயிக்கு சொந்தமான ஆழ்துளை கிணற்றின் குறுக்கே இருந்த கம்பத்தில் போடப்பட்டிருந்த தூக்கில் பாண்டியன் பிணமாக தொங்கினார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பாப்பாநாடு போலீசார் அங்கு சென்று பாண்டியனின் உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து புயலில் வீடு சேதமடைந்ததால் ஏற்பட்ட மனவேதனையில் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story