நாமக்கல், ராசிபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


நாமக்கல், ராசிபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
x
தினத்தந்தி 11 Dec 2018 11:00 PM GMT (Updated: 11 Dec 2018 10:01 PM GMT)

நாமக்கல், ராசிபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

நாமக்கல்,

தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மற்றும் மிசோரம் மாநிலங்களில் சட்டசபை தேர்தலின் போது பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் ராஜஸ்தான், சத்தீஷ்கார் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று பா.ஜ.க.விடம் இருந்து ஆட்சியை தட்டி பறித்தது. இதை நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

நாமக்கல் மணிக்கூண்டு அருகே கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் வெற்றியை கொண்டாடினர். இந்த நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்ட தலைவர் ஷேக்நவீத் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் மாவட்ட தலைவர் ஜி.ஆர்.சுப்பிரமணியம், மாவட்ட துணை தலைவர் மாணிக்கம், நகர செயலாளர் குப்புசாமி, துணை தலைவர் ராஜேந்திரன், சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை தலைவர் சபருல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ராசிபுரம் அருகே உள்ள வடுகம் முனியப்பம்பாளையம் கிராம காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சியினர் நாமகிரிப்பேட்டை வட்டார காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் சவுந்திரராஜன் தலைமையில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதேபோல ராசிபுரம் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் பாச்சல் சீனிவாசன், ராசிபுரம் நகர தலைவர் ஸ்ரீராமுலு முரளி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் விநாயகமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குமாரபாளையம் காங்கிரஸ் கட்சியினர் பள்ளிபாளையம் பிரிவு சாலை பகுதியில் நகர தலைவர் ஜானகிராமன் தலைமையில் பட்டாசு வெடித்தனர். வாகனங்களில் மற்றும் நடந்து சென்ற பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் தங்கராஜ், சிவராஜ், சுப்பிரமணி, சரவணன், சக்திவேல், தாமோதரன், காளியப்பன், சிவகுமார், மனோகரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.



Next Story