2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

மணமேல்குடி அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மணமேல்குடி,
மணமேல்குடி அடுத்த தண்டலை கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமன் (வயது 50). இவர் கோட்டைபட்டினம் மின்வாரிய அலுவலகத்தில் மின்வாரிய ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் முத்துராமன், அவரது மனைவி மற்றும் மகளுடன் வீட்டின் முன்பக்க அறையில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த 13 பவுன் நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். பின்னர் கலையில் முத்துராமன் எழுந்து வந்து பீரோவை பார்த்த போது நகைகள்-பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதேபோல் அதே பகுதியை சேர்ந்தவர் அறிவுமணி மனைவி மலர்விழி (45). இவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டின் பீரோவில் இருந்த 5 கிராம் நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து மணமேல்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு வந்த மணமேல்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு காமராஜ், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார் முத்துராமன் மற்றும் மலர்விழி வீட்டிற்கு சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து புதுக்கோட்டையிலிருந்து அர்ஜுன் என்ற மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய், முத்துராமன் வீட்டிலிருந்து தண்டலை அம்மன்கோவில் பகுதி வரையும் சென்றது. யாரையும் கவ்வி படிக்கவில்லை. இதுகுறித்து முத்துராமன், மலர்விழி கொடுத்த புகாரின்பேரில் மணமேல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். தண்டலை கிராமத்தில் தொடர்ந்து 2 வீடுகளில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மணமேல்குடி அடுத்த தண்டலை கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமன் (வயது 50). இவர் கோட்டைபட்டினம் மின்வாரிய அலுவலகத்தில் மின்வாரிய ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் முத்துராமன், அவரது மனைவி மற்றும் மகளுடன் வீட்டின் முன்பக்க அறையில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த 13 பவுன் நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். பின்னர் கலையில் முத்துராமன் எழுந்து வந்து பீரோவை பார்த்த போது நகைகள்-பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதேபோல் அதே பகுதியை சேர்ந்தவர் அறிவுமணி மனைவி மலர்விழி (45). இவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டின் பீரோவில் இருந்த 5 கிராம் நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து மணமேல்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு வந்த மணமேல்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு காமராஜ், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார் முத்துராமன் மற்றும் மலர்விழி வீட்டிற்கு சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து புதுக்கோட்டையிலிருந்து அர்ஜுன் என்ற மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய், முத்துராமன் வீட்டிலிருந்து தண்டலை அம்மன்கோவில் பகுதி வரையும் சென்றது. யாரையும் கவ்வி படிக்கவில்லை. இதுகுறித்து முத்துராமன், மலர்விழி கொடுத்த புகாரின்பேரில் மணமேல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். தண்டலை கிராமத்தில் தொடர்ந்து 2 வீடுகளில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story