பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாணவி திடீர் சாவு


பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாணவி திடீர் சாவு
x
தினத்தந்தி 18 Dec 2018 9:30 PM GMT (Updated: 18 Dec 2018 8:30 PM GMT)

பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவி திடீரென மயங்கி விழுந்தார்.

தொண்டி,

திருவாடானை தாலுகா பாசிப்பட்டினம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சர்தார். இவரது மகள் சையத் அலி பாத்திமா(வயது 16). இவர் தொண்டியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவி திடீரென ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். உடனே அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

 இதுபற்றி தகவல் அறிந்த எஸ்.பி.பட்டினம் போலீசார், சையத் அலி பாத்திமா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து, மாணவி திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு எப்படி இறந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story