காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை


காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 10 Jan 2019 10:15 PM GMT (Updated: 10 Jan 2019 3:53 PM GMT)

தென்தாமரைகுளம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தென்தாமரைகுளம்,

தென்தாமரைகுளம் அருகே முகிலன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 28). இவர் சொந்தமாக டெம்போ வைத்து ஓட்டி வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த புனிதா (25) என்ற பெண்ணுக்கும் காதல் மலர்ந்தது. இவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

புனிதா, கன்னியாகுமரியில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். இவர் தினமும் காலையில் வேலைக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்புவது வழக்கம். புனிதாவின் பெற்றோர் வீடு தேரிவிளையில் உள்ளது. 

நேற்று முன்தினம் காலையில் வழக்கம் போல் வேலைக்கு சென்ற புனிதா, மதியம் தேரிவிளையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார். அங்கு திடீரென அவர் வாயில் நுரைதள்ளியபடி மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே புனிதா பரிதாபமாக இறந்தார்.

அவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து தென்தாமரைகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  சப்–இன்ஸ்பெக்டர் ஜெகன் வழக்குப்பதிவு செய்து புனிதா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்று விசாரணை நடத்தி வருகிறார்.

 மேலும், புனிதாவுக்கு திருமணம் நடந்து 5 ஆண்டுகளே ஆவதால் நாகர்கோவில் ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story