தொழிலாளி தீக்குளித்து தற்கொலை: காப்பாற்ற முயன்ற மனைவி சிகிச்சை பலனின்றி சாவு


தொழிலாளி தீக்குளித்து தற்கொலை: காப்பாற்ற முயன்ற மனைவி சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 13 Jan 2019 10:15 PM GMT (Updated: 13 Jan 2019 4:51 PM GMT)

தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் அவரை காப்பாற்ற சென்ற மனைவியும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தை அடுத்த புத்தேரி பகுதியை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி என்கிற மூர்த்தி (வயது 37). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சத்தியா (30) இவர்களுக்கு சந்துரு (9) என்ற மகனும், ஹரினி என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில், விநாயகமூர்த்திக்கும் அவரது மனைவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த விநாயகமூர்த்தி சில நாட்களுக்கு முன்னர் வீட்டில் இருந்த மண் எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

அலறல் சத்தம் கேட்ட அவரது மனைவி சத்தியா, மகன் சந்துரு ஆகியோர் அவரை காப்பாற்ற ஓடினார்கள். ஆனால் அவர்களுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இதில் விநாயகமூர்த்தி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

சத்தியா, சந்துரு ஆகியோர் உடனடியாக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு சத்தியா பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும், காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் தலைமையில் காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story