பேராவூரணி அருகே அழுகிய நிலையில் பெண் பிணம் கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை


பேராவூரணி அருகே அழுகிய நிலையில் பெண் பிணம் கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 20 Jan 2019 10:15 PM GMT (Updated: 20 Jan 2019 10:11 PM GMT)

பேராவூரணி அருகே அழுகிய நிலையில் பெண் பிணமாக கிடந்தார்.இவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேராவூரணி,

 தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே அம்மையாண்டி கிராமத்தில் வயலில் அழுகிய நிலையில் ஒரு பெண் பிணம் கிடந்துள்ளது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து பேராவூரணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பிணமாக கிடந்த பெண், பட்டுக்கோட்டை அருகே சூரப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த மருதமுத்து மனைவி சாந்தி (வயது45), என்பதும், கடந்த 6 ஆண்டுகளாக கணவரை பிரிந்து பேராவூரணி அருகே செங்கமங்கலத்தில் உள்ள தனது தந்தை குப்புசாமி வீட்டில் சாந்தி வசித்து வந்தார் என்பதும் தெரிய வந்தது.


மேலும், கூலித்தொழிலாளியான சாந்தி கடந்த 16–ந்தேதியில் இருந்து காணவில்லை. இதனால் அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்ததும் தெரிய வந்தது.

 இதுகுறித்த புகாரின் பேரில் பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து சாந்தி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story