காரைக்குடி அருகே மனைவி, மாமனார்–மாமியார் மீது உருட்டுக் கட்டையால் தாக்குதல் கட்டிட தொழிலாளி கைது


காரைக்குடி அருகே மனைவி, மாமனார்–மாமியார் மீது உருட்டுக் கட்டையால் தாக்குதல் கட்டிட தொழிலாளி கைது
x
தினத்தந்தி 12 Feb 2019 10:45 PM GMT (Updated: 12 Feb 2019 8:56 PM GMT)

காரைக்குடி அருகே மனைவி, மாமனார் –மாமியார் மீது உருட்டுக் கட்டையால் தாக்குதல் நடத்திய கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

காரைக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனூர் அருகே உள்ள தேத்தாம்பட்டியைச் சேர்ந்தவர் சண்முகவேல். கட்டிட தொழிலாளி. இவருக்கும், காரைக்குடி அருகே உள்ள சிறுவயல் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவருக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சண்முகவேல் தினமும் குடித்து விட்டு வந்து ராஜேஸ்வரியுடன் தகராறில் ஈடுபட்டு உள்ளார்.

இதனால் ராஜேஸ்வரி கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதைத் தொடர்ந்து சண்முகவேல் அங்கு சென்று குடும்பம் நடத்த வருமாறு மனைவியை அழைத்துள்ளார். இதற்கு அவர் மறுக்கவே வாக்குவாதம் முற்றியதில் ராஜேஸ்வரியை சண்முகவேல் உருட்டுக்கட்டையால் தாக்க முயன்றார்.

அப்போது ராஜேஸ்வரியின் தாயும், தந்தையும் தடுக்க முயன்றனர். இதில் ராஜேஸ்வரியும், அவரது பெற்றோரும் தாக்கப்பட்டு காயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து ராஜேஸ்வரி குன்றக்குடி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகவேலை கைது செய்தனர்.


Next Story