தொழிலாளர் வாரிய உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் திருமானூரில் நாளை நடக்கிறது


தொழிலாளர் வாரிய உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் திருமானூரில் நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 20 Feb 2019 10:15 PM GMT (Updated: 20 Feb 2019 8:22 PM GMT)

அமைப்புசாரா தொழிலாளர்களின் வாரிய உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.

அரியலூர்,

அமைப்புசாரா தொழிலாளர்களின் வாரிய உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு முகாமில் திருமானூர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர் மற்றும் கட்டுமான தொழிலாளர்களிடம் இருந்து பதிவு விண்ணப்பங்கள் மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்கள், நல உதவி கேட்பு மனுக்கள் பெற்றுக் கொள்ளப்படும். இதில் கடைகள். நிறுவனங் களில் வேலை செய்பவர்கள், தெருசுமை வியாபாரிகள், தையல் கலைஞர்கள், நெசவுத் தொழில், ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்கள் உள்ளிட்ட 60 வகையான தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும், கட்டுமானம் சம்பந்தப்பட்ட கொத்தனார், சித்தாள், கம்பிகட்டுனர், பிளம்பர், பெயிண்டர் உட்பட 53 வகையான தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களும் உறுப்பினர்களாக சேரலாம். இந்த வகையில் வீட்டு வேலை செய்பவர்களும் தமிழ்நாடு வீட்டுப் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேரலாம். 18 வயது முடிந்தவர்களும், 60 வயது பூர்த்தியடையாதவர்களும் உறுப்பினர்களாக சேர தகுதியுடையவர்கள். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் சான்றொப்பமிடப்பட்ட குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை, வயது சான்று (கல்வி மாற்று சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம்), 3 புகைப்படங்கள், செய்யும் வேலைக்கான உரிய பதிவு விண்ணப்பத்தில் பெறப்பட்ட தேதியுடன் கிராம நிர்வாக அதிகாரியின் கையொப்பம், வங்கி கணக்குப் புத்தகத்தின் நகல் ஆகியவற்றுடன் மேற்படி முகாமில் நேரில் ஆஜராகி உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளலாம். பதிவு பெற்ற உறுப்பினர்களின் வாரிசுகளுக்கான கல்வி உதவித்தொகை (10-ம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை), திருமண உதவித் தொகை, பெண் உறுப்பினர்களுக்கு மகப்பேறு உதவித்தொகை, 60 வயது முடிந்தவர்களுக்கு ஓய்வூதியம், இயற்கை மரணம் மற்றும் விபத்து மரண உதவித் தொகை, விபத்து ஊன உதவித் தொகை போன்ற உதவித் தொகைகள் வழங்்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். 

Next Story