நிவாரணம் கேட்டு கிராமமக்கள் சாலை மறியல்


நிவாரணம் கேட்டு கிராமமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 10 March 2019 10:30 PM GMT (Updated: 10 March 2019 8:24 PM GMT)

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் முறையாக வழங்கவில்லை எனவும், அனைவருக்கும் நிவாரண பொருட்கள், உதவித்தொகை வழங்க கோரி மறியலில் ஈடுபட்டனர்.

கீரனூர்,

கஜாபுயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் முறையாக வழங்கவில்லை எனவும், அனைவருக்கும் நிவாரண பொருட்கள், உதவித்தொகை வழங்க கோரி கீரனூர் அருகே உள்ள செங்கனூர், மேலப்பட்டி, வடக்கிப்பட்டி, கண்ணாப்பட்டி, கட்டுக்கோபட்டி உள்பட 10 கிராமங்களை சேர்ந்து கிராம மக்கள் திருச்சி-புதுக்கோட்டை புறவழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாஞ்சில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் புதுக்கோட்டை-திருச்சி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story