சோழவந்தான் அருகே எம்.ஜி.ஆர். உருவச்சிலை உடைப்பு போலீசார் விசாரணை


சோழவந்தான் அருகே எம்.ஜி.ஆர். உருவச்சிலை உடைப்பு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 31 March 2019 10:15 PM GMT (Updated: 31 March 2019 10:02 PM GMT)

சோழவந்தான் அருகே எம்.ஜி.ஆர். சிலை உடைக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோழவந்தான்,

சோழவந்தான் அருகே கருப்பட்டி பாலகிருஷ்ணாபுரத்தில் முன்னாள் முதல்–அமைச்சரும், அ.தி.மு.க. நிறுவனருமான எம்.ஜி.ஆர். திருஉருவச்சிலை உள்ளது. நேற்று அதிகாலை அவ்வழியாக சென்றவர்கள் எம்.ஜி.ஆர். சிலை உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவர்கள் இதுகுறித்து சோழவந்தான் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர்.

இதில் எம்.ஜி.ஆர். சிலையில் வலது கை மணிக்கட்டு பகுதி உடைக்கப்பட்டு சேதமடைந்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தேர்தல் நேரத்தில் எம்.ஜி.ஆர். சிலை உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டு உள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story