திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தேசிய விருது பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்


திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தேசிய விருது பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 20 April 2019 11:00 PM GMT (Updated: 20 April 2019 6:38 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தேசிய விருதுபெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

திருவாரூர்,

மத்திய அரசு விளையாட்டுத்துறையில் நமது தேசத்திற்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டி தரும் சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்றுனர்கள் மற்றும் விளையாட்டு தொடர்புடையவர்களுக்கு பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி 2019-ம் ஆண்டிற்கான அர்ஜூனா விருது, ராஜீவ்்காந்தி கேல்ரத்னா விருது, தயான்சந்த் விருது ஆகிய தேசிய விருதுகள் பெற திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்றுனர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் விவரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான ளனயவ.வெ-.பழ என்ற முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர். விளையாட்டரங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருவாரூர் என்ற முகவரிக்கு வருகிற 24-ந் தேதிக்்குள் சென்றடையுமாறு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்கள் பெற திருவாரூர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story