திருச்சி சேவை மையத்தில் பார்வையற்ற 2 காதல் ஜோடிகளுக்கு இலவச திருமணம்


திருச்சி சேவை மையத்தில் பார்வையற்ற 2 காதல் ஜோடிகளுக்கு இலவச திருமணம்
x
தினத்தந்தி 20 May 2019 10:30 PM GMT (Updated: 20 May 2019 9:08 PM GMT)

திருச்சி விமான நிலையம் அருகே உள்ள காமராஜ் நகரில் லூப்ரா பார்வையற்றோர் மற்றும் ஊனமுற்றோர் சேவை மையம் இயங்கி வருகிறது.

திருச்சி,

திருச்சி விமான நிலையம் அருகே உள்ள காமராஜ் நகரில் லூப்ரா பார்வையற்றோர் மற்றும் ஊனமுற்றோர் சேவை மையம் இயங்கி வருகிறது. இந்த சேவை மையத்தில் பார்வையற்றோர், முதியோர், ஏழை மாணவ-மாணவிகள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் தங்கி பயன்பெற்று வருகிறார்கள். மேலும் இசைக்குழுவையும் நடத்தி வருகிறது. இந்த மையத்தில் தங்கி உள்ள பார்வையற்ற சூசைராஜ் (வயது40)- தேவி(35) ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதேபோல் திருப்பூரை சேர்ந்த பார்வையற்ற ராஜா(40)- ராதிகா(37) ஆகியோரும் காதலித்து வந்தனர். இதையறிந்த சேவை மைய நிர்வாகம், பார்வையற்ற 2 காதல் ஜோடிகளுக்கும் இலவசமாக திருமணம் நடத்திட ஏற்பாடு செய்தது. அதன்படி, நேற்று சேவை மையத்தில் 2 காதல் ஜோடிகளுக்கும் திருமணம் நடைபெற்றது. சேவை மைய நிர்வாக இயக்குனர் தாமஸ் வரவேற்று, மணமக்களை வாழ்த்தி பேசினார். இதில் நிர்வாகிகள் வசந்தகுமாரி மேகநாதன், புவனேசுவரி குணசேகரன், சித்ரா புவனேசுவரன், முருகாயி, விக்னேஸ்வரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு வாழ்த்தினர். 

Next Story