ஒகேனக்கல்லில் நண்பர்களுடன் குளித்த போது காவிரி ஆற்றில் மூழ்கி என்ஜினீயர் சாவு


ஒகேனக்கல்லில் நண்பர்களுடன் குளித்த போது காவிரி ஆற்றில் மூழ்கி என்ஜினீயர் சாவு
x
தினத்தந்தி 25 May 2019 11:15 PM GMT (Updated: 25 May 2019 3:05 PM GMT)

ஒகேனக்கல்லில் நண்பர்களுடன் குளித்த போது காவிரி ஆற்றில் மூழ்கி என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.

பென்னாகரம்,

புதுச்சேரி ஆர்.கே. நகரை சேர்ந்தவர் ராஜசேகர். இவருடைய மகன் விஸ்வநாதன் (வயது30). மரைன் என்ஜினீயரிங் பட்டதாரி. இவர் புதுச்சேரியில் மது பார் நடத்தி வந்தார். இந்தநிலையில் விஸ்வநாதன் நேற்று நண்பர்கள் 4 பேருடன் ஒகேனக்கல்லுக்கு காரில் சுற்றுலா வந்தார். இவர்கள் 5 பேரும் ஆலாம்பாடி பகுதியில் நீலகிரி பிளேட் என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தனர்.

அப்போது விஸ்வநாதன் காவிரி ஆற்றில் இக்கரையில் இருந்து அக்கரைக்கு நீந்தி சென்றார். பின்னர் அவரால் திரும்பி வரமுடியாமல் தண்ணீரில் தத்தளித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார்.

இதுகுறித்து ஒகேனக்கல் போலீசாருக்கும், தீயணைப்பு படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஸ்வநாதன் காவிரி ஆற்றில் மூழ்கிய இடத்திலேயே உடலை மீட்டனர். பின்னர் போலீசார் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சு மூலம் போலீசார் அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால் அரசு ஆஸ்பத்திரியில் போதிய மருத்துவ அலுவலர்கள் இல்லாததால் விஸ்வநாதனின் உடல் மாலை 5 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஆம்புலன்சிலேயே இருந்தது. இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story