களியக்காவிளை அருகே போலீஸ்காரர் வீட்டில் பணம் திருட்டு


களியக்காவிளை அருகே போலீஸ்காரர் வீட்டில் பணம் திருட்டு
x
தினத்தந்தி 29 May 2019 10:15 PM GMT (Updated: 29 May 2019 3:00 PM GMT)

களியக்காவிளை அருகே போலீஸ்காரர் வீட்டில் பணம் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

களியக்காவிளை,

களியக்காவிளை அம்சிகாகுழி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 65), ஓய்வு பெற்ற போலீஸ்காரர்.  சம்பவத்தன்று இவர், தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வெளியூர் சென்றிருந்தார். மீண்டும் வீடு திரும்பிய அவர் கதவை திறந்து உள்ளே சென்ற போது, படுக்கை அறையில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. அங்கிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.5 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன், இதுபற்றி களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

ஜன்னல் கண்ணாடி உடைப்பு

 தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது, மர்ம நபர்கள் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே புகுந்து பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

 மேலும், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும்  அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் மர்மநபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? எனவும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Next Story