பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்யலாம்


பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்யலாம்
x
தினத்தந்தி 4 Jun 2019 10:15 PM GMT (Updated: 4 Jun 2019 8:48 PM GMT)

பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குமதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்து கொள்ளலாம்.

புதுக்கோட்டை,

பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

எனவே பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களது எஸ்.எஸ்.எல்.சி. கல்வித் தகுதியினை பதிவு செய்த வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை எண், ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை, கைப்பேசி எண், இணையதளம் முகவரி ஆகிய விவரங்களுடன் மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாள் அன்று எடுத்து வர வேண்டும்.

எஸ்.எஸ்.எல்.சி. கல்வி தகுதியினை பதிவு செய்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் தெரியவில்லை எனில் வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி பெற்று கொள்ள வேண்டும்.

17-ந் தேதி வரை

நேற்று முன்தினம் முதல் வருகிற 17-ந் தேதி வரை வேலைவாய்ப்பு பதிவு பணி அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும். பதிவுப்பணி நடைபெறும் 15 நாட்களுக்கும் மதிப்பெண் சான்று வழங்க தொடங்கிய முதல் நாளையே பதிவு மூப்பு தேதியாக வழங்கப்படும். மேலும் https://tnvelaivaaippu.gov.in என்ற வேலைவாய்ப்பு துறை இணையதளம் வழியாகவும் பதிவு செய்து கொள்ளலாம். பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற வேலைவாய்ப்பு பதிவு செய்ய விரும்பும் அனைத்து மாணவர்களும் தவறாது இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். 

Next Story