மன்னார்குடி அருகே தீ விபத்தில் 3 மாடுகள் படுகாயம் கூரை வீடு எரிந்து நாசம்


மன்னார்குடி அருகே தீ விபத்தில் 3 மாடுகள் படுகாயம் கூரை வீடு எரிந்து நாசம்
x
தினத்தந்தி 11 Jun 2019 11:00 PM GMT (Updated: 11 Jun 2019 6:55 PM GMT)

மன்னார்குடி அருகே தீ விபத்தில் 3 மாடுகள் படுகாயம் அடைந்தன. கூரை வீடு எரிந்து நாசமானது.

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள ராமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாறன்(வயது48). விவசாயி. இவர் கூரை வீட்டில் வசித்து வருகிறார். மாறன் நேற்று வீட்டை பூட்டி விட்டு மனைவி தேன்மொழியுடன் வெளியே சென்று இருந்தார்.

இந்த நிலையில் அவருடைய வீட்டின் கூரையில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென வீடு முழுவதும் பரவியது.

இந்த தீ விபத்தில் வீட்டுக்கு அருகே கட்டப்பட்டிருந்த 3 மாடுகள் படுகாயம் அடைந்தன. அந்த மாடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். விபத்தில் வீடு முற்றிலும் எரிந்து நாசமானது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்த மாறன் மற்றும் அவருடைய மனைவி தேன்மொழி உடனடியாக வீட்டுக்கு வந்தனர். அப்போது படுகாயம் அடைந்த மாடுகளையும், தீயில் எரிந்து நாசமான வீட்டையும் பார்த்து கதறி அழுதனர். தீ விபத்தில் 3 மாடுகள் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து மன்னார்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story