பட்டுக்கோட்டையில் முன்விரோதத்தில், வாலிபர் அடித்துக்கொலை 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை


பட்டுக்கோட்டையில் முன்விரோதத்தில், வாலிபர் அடித்துக்கொலை 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 22 Jun 2019 10:15 PM GMT (Updated: 22 Jun 2019 8:09 PM GMT)

பட்டுக்கோட்டையில், முன்விரோதத்தில் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் டாஸ்மாக் கடை அருகே கிடந்தது. இது தொடர்பாக போலீசார் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஆதிதெருவைச் சேர்ந்தவர் மாணிக்கவாசகம். இவருடைய மகன் செல்வம்(வயது 26). இவர், பழைய இரும்புக்கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பட்டுக்கோட்டை வாவு தோப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் செல்வம், ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரது உடல் அருகில் உடைந்த மதுபாட்டில்கள் சிதறிக் கிடந்தன.

இதுகுறித்து பட்டுக்கோட்டை நகர போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் அறிந்து போலீஸ் துணை சூப்பிரண்டு கணேசமூர்த்தி, இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அவரை யாரோ அடித்து கொலை செய்து உடலை அங்கேயே போட்டு விட்டு சென்றது தெரிய வந்தது.

2 பேரை பிடித்து விசாரணை

பின்னர் கொலை செய்யப்பட்ட செல்வத்தின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில், முன்விரோதம் காரணமாக வாலிபர் செல்வம் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

Next Story