கல்வி உதவித்தொகை பெற கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் சாந்தா தகவல்


கல்வி உதவித்தொகை பெற கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் சாந்தா தகவல்
x
தினத்தந்தி 14 July 2019 11:00 PM GMT (Updated: 14 July 2019 5:46 PM GMT)

கல்வி உதவித்தொகை பெற கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் சாந்தா கூறினார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை- அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ- மாணவிகளுக்கு எவ்வித நிபந்தனைகள்யின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். உதவித்தொகைக்கான கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்ப படிவங்களை அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று வருகிற அக்டோபர் மாதம் 15-ந் தேதிக்குள் பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ- மாணவிகள் தங்களின் வங்கி கணக்கு எண் விவரங்களை தவறாது குறிப்பிட வேண்டும்.

செப்டம்பர் 1-ந் தேதியில் தொடங்கும் கல்வி உதவித்தொகை இணையதளத்தில் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை அக்டோபர் 25-ந் தேதிக்கு முன்பும், புதிய விண்ணப்பங்களை நவம்பர் 30-ந் தேதிக்கு முன்பும் அந்தந்த கல்வி நிறுவனங்கள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகவும். அரசு இணையதளம் www.tn.gov.in/bc-m-b-c-d-ept& யிலும் இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்பப்படிவங்கள் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story