ஜல் சக்தி அபியான் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த அனைத்து அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்


ஜல் சக்தி அபியான் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த அனைத்து அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 18 July 2019 10:45 PM GMT (Updated: 18 July 2019 8:16 PM GMT)

நாகை கலெக்டர் அலுவலகத்தில் ஜல் சக்தி அபியான் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த அனைத்து அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் மத்திய ஒருங்கிணைப்பு அலுவலர் சஞ்சீவ் பட்ஜோஷி தலைமையில் நடைபெற்றது.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஜல் சக்தி அபியான் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்து அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மத்திய ஒருங் கிணைப்பு அலுவலரும், ஊரக வளர்ச்சித்துறை இணை செயலாளருமான சஞ்சீவ் பட்ஜோஷி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார்.

நாகை மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சகத்தின் மூலம் ஜல் சக்தி அபியான் எனப்படும் நீர்வள ஆதாரங்களை பெருக்கி நீரினை சேமிக்கும் திட்ட பணிகளை பல்வேறு துறைகளால் ஜூலை மாதம் முதல் நவம்பர் மாதம் வரை செயல்படுத்த உள்ளது. ஜல் சக்தி அபியான் திட்டப்பணிகளின் முன்னேற்றத்தை மத்திய ஒருங்கிணைப்பு அலுவலர் சஞ்சீவ் பட்ஜோஷி தலைமையில் தொழில்நுட்ப அலுவலர்கள் கிரிதர், தரம்வீர்் சிங் ஆகியோர் ஆய்வு செய்ய உள்ளனர்.

விழிப்புணர்வு

ஜல் சக்தி அபியான் இயக்கத்தில் குடிநீர் பாதுகாப்பு மற்றும் மழைநீர்்் சேகரித்தல், பாரம்பரிய குளங்கள்-நீர்நிலைகளை சீரமைத்தல், மறுபயன்பாடு ஆழ்குழாய் கிணறுகளை நிரப்பும் அமைப்பு உருவாக்குதல், ஆற்றுப்படுகை வளர்ச்சி, தீவிர காடு வளர்ப்பு உள்ளிட்ட 5 தலைப்புகளில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான பணிகளை மாணவர்கள், பொதுமக்களை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும், நாகை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும்் ஜல் சக்தி அபியான் திட்டப்பணிகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, நாகை உதவி கலெக்டர் கமல்கிஷோர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தியாகராஜன் உள்பட அனைத்து அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story