வேலைக்கு செல்லுமாறு கூறிய மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொன்றவர் கைது


வேலைக்கு செல்லுமாறு கூறிய மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொன்றவர் கைது
x
தினத்தந்தி 22 July 2019 9:28 PM GMT (Updated: 22 July 2019 9:28 PM GMT)

புனேயில்வேலைக்கு செல்லுமாறு கூறியமனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொன்றவரை போலீசார் கைது செய்தனர்.

புனே, 

புனே விஸ்ராந்த் வாடியை சேர்ந்தவர் தியானேஷ்வர்(வயது40). இவரது மனைவி ரமாபாய்(35). இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும், 2 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர்.

தியானேஷ்வர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். ரமாபாய் அங்குள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்தார்.

இருந்தாலும் பணகஷ்டம் காரணமாக கணவரை வேலைக்கு செல்லும்படி வற்புறுத்தி வந்தார்.

இது தியானேஷ்வருக்கு கோபத்தை உண்டாக்கியது. சம்பத்தன்று இது தொடர்பாக கணவர், மனைவி இருவருக்கும் இடையே தகராறு உண்டானது. இதில் கோபம் அடைந்த தியானேஷ்வர் வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து ரமாபாயை சரமாரியாக தாக்கினார்.

இதனால் அவர் வேதனை தாங்க முடியாமல் அலறினார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் தலையில் படுகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் துடித்து கொண்டிருந்த ரமாபாயை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு தியானேஷ்வரை கைது செய்தனர்.

Next Story