சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலில் போலீஸ் பாதுகாப்பு


சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலில் போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 14 Aug 2019 10:43 PM GMT (Updated: 14 Aug 2019 10:43 PM GMT)

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

திருச்செந்தூர்,

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பிரகாரம் மற்றும் கடற்கரை பகுதியில், துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதனால் பக்தர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா, சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கர், பாஸ்கர், வெடிகுண்டு நிபுணர் சின்னத்துரை உள்ளிட்டவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.


Next Story