செல்போனை உடைத்ததால் விரக்தி தூக்குப்போட்டு பெண் தற்கொலை - கணவர் கைது


செல்போனை உடைத்ததால் விரக்தி தூக்குப்போட்டு பெண் தற்கொலை - கணவர் கைது
x
தினத்தந்தி 22 Sep 2019 9:30 PM GMT (Updated: 22 Sep 2019 8:30 PM GMT)

செல்போனை உடைத்ததால் விரக்தியடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் தொடர்பாக அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.

ஆனைமலை,

ஆனைமலையை அடுத்தபெரியபோதுகிராமத்தை சேர்ந்தவர்ராமச்சந்திரன். இவரது மகள்கார்த்திகாயினி(வயது 28). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களது உறவினரான செந்தில்நாதன் (32)என்பவரை காதலித்து திருமணம்செய்து கொண்டார். இவர்களுக்கு 9 மற்றும் 6 வயதில் 2 மகன்கள் உள்ளனர். தேங்காய் வியாபாரம் செய்து வரும் செந்தில்நாதனுக்குமதுப்பழக்கம்இருந்துள்ளது.

வியாபாரத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதாலும், குடிப்பழக்கத்தாலும் செந்தில்நாதன் தனது மனைவிகார்த்திகாயினியிடம்அடிக்கடி தகராறு செய்துவந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில்தூங்கச்சென்றகார்த்திகாயினிநைலான் கயிறால்தூக்குப்போட்டு தற்கொலைசெய்து கொண்டார். நேற்றுகாலை தகவல்அறிந்ததும்ஆனைமலை போலீசார்சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுகார்த்திகாயினியின்உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவைஅரசுஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இந்தநிலையில்கார்த்திகாயினியின்தந்தை, தனதுமகளை செந்தில்நாதன்அடித்து துன்புறுத்தியதால்இறந்ததாக போலீசில்புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துசெந்தில்நாதனை கைதுசெய்தனர்.

இந்த சம்பவம்குறித்து போலீசார்கூறியதாவது, தொழிலில் ஏற்பட்ட நஷ்டங்களால்செந்தில்நாதன்மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார். மேலும் உறவினர்களிடம் பேசக்கூடாது என்று கூறிகார்த்திகாயினியின்செல்போனையும்பறித்து தரையில்வீசி உடைத்துள்ளார். இதனால்விரக்தியடைந்தநிலையில் காணப்பட்டகார்த்திகாயினிதூக்குப்போட்டு தற்கொலைசெய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. மேலும் அவரது கை உள்ளிட்ட இடங்களில்சிராய்ப்பு காயங்கள்உள்ளன. ஆகவேகார்த்திகாயினிமரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில்செந்தில்நாதனை கைதுசெய்து விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story